திருக்கோவிலூர் அருகே பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா கைது

by Admin / 03-08-2021 12:52:14pm
திருக்கோவிலூர் அருகே பேத்தியை பலாத்காரம் செய்த தாத்தா கைது



   
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மகள் வழி பேத்தி என்று கூட பாராமல் பலாத்காரம் செய்த தாத்தாவை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை அருகே செல்லங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 70). இவரது மகள் பொன்னி. இவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

 கடந்த ஆண்டுக்கு முன்பு ராஜா தனது மனைவி பொன்னியை விட்டுவிட்டு பெங்களூரில் வேறு பெண்ணை திருமணம் செய்து அங்கேயே வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பொன்னி உடல்நலக்குறைவால் இறந்தார். எனவே பொன்னியின் குழந்தைகள் தந்தை முனியாண்டி வளர்ப்பில் உள்ளனர். தற்போது பொன்னியின் மகளுக்கு 15 வயது ஆகிறது. இந்த சிறுமியை முனியாண்டி தனது மகள் வழி பேத்தி என்று கூட பாராமல் கடந்த 3 ஆண்டுகளாக கட்டாயப்படுத்தி தகாத உறவில் இருந்து வந்துள்ளார். தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்து உள்ளார்.

அதிர்ச்சி அடைந்த முனியாண்டி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி உதவியுடன் திருக்கோவிலூர் அருகே உள்ள மணம்பூண்டி பகுதியில் வசிக்கும், ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி என்பவரிடம் தனது பேத்திக்கு கருக்கலைப்பு செய்து உள்ளார். அப்போது சிறுமிக்கு இறந்த நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை முதியவர் முனியாண்டி தென்பெண்ணையாற்றில் புதைத்து விட்டார். இந்த தகவல் ஊர்முழுக்க கசிந்துள்ளது.

இதனை அடுத்து கிராம நிர்வாக அலுவலர் தாமாக முன்வந்து திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் முதியவர் முனியாண்டி மீதும் அவருக்கு உறுதுணையாக இருந்த இந்திராணி என்பவர் மீதும், கருக்கலைப்பு செய்த ஓய்வுபெற்ற செவிலியர் ராஜாமணி உள்ளிட்ட மூவர் மீதும் போக்சோ உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்

 

Tags :

Share via