மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீர்ப்பு - வைகோ கண்டனம்

by Staff / 31-01-2024 03:44:02pm
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தீர்ப்பு - வைகோ கண்டனம்

இந்து அல்லாதவர்களை, பழநி கோயிலில் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ, விரும்பிய தலங்களில் வழிபடுவது அவரவர் நம்பிக்கையை சார்ந்தது. நாகூர் தர்காவிலும், வேளாங்கண்ணி மாதா கோவிலிலும் இந்துக்களும் பிற மதத்தினரும் வழிபட்டு வரும் நிலையில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ள இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுருத்தியுள்ளார்.

 

Tags :

Share via