தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடியமழைக்கு வாய்ப்பு.

by Editor / 01-02-2024 09:17:02am
தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடியமழைக்கு வாய்ப்பு.

அடுத்த 3 மணிநேரத்தில் தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லோசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

 

Tags : இடி மின்னலுடன் கூடியமழைக்கு வாய்ப்பு.

Share via

More stories