மக்களவையில் கடும் அமளி - திமுக வெளிநடப்பு

by Staff / 06-02-2024 12:53:02pm
மக்களவையில் கடும் அமளி - திமுக வெளிநடப்பு

மத்திய அமைச்சர்கள் மற்றும் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், மக்களவையில் இருந்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.கள் வெளிநடப்பு செய்தனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதி அதிகமாக அளிக்கப்படுவதாகவும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பராபட்சத்துடன் நடத்தப்படுவதாகவும் டி.ஆர்.பாலு குற்றம்சாட்டினார். இதனால் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, டி.ஆர்.பாலுவின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க பாஜக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சரை தகுதியற்றவர் என டி.ஆர்.பாலு கூறியதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டுமென மத்திய அமைச்சர்கள் வாக்குவாதம் செய்ததால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via