பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் உயிரிழப்பு

by Staff / 13-02-2024 12:37:18pm
பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண் உயிரிழப்பு

கேரளாவின் இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலையில் பக்கத்துவீட்டுக்காரர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். தேனி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஷீலா (31) என்பவர் இன்று காலை உயிரிழந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டுக்காரரான சசிகுமார் என்பவர் ஷீலாவை தாக்கி வீட்டுக்குள் வைத்து பூட்டி ஷீலாவின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். முன் விரோதம் காரணமாக குற்றவாளி, ஷீலா மீது தீ வைத்ததாக போலீசார் தெரிவித்தனர். சசிகுமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், போலீஸ் காவலில் உள்ளார். அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், தற்போது இடுக்கி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Tags :

Share via