இஸ்லாமிய மாணவர்களுக்கு உதவித் தொகை - முதல்வர் அறிவிப்பு
மத்திய பாஜக அரசு நிறுத்திய உதவித்தொகை இனி தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வக்ஃப் வாரியம் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் சிறுபான்மை நல ஆணையக் கூட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம். சிறுபான்மையின மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மெட்ரிக் கல்விக்கு முந்தைய கல்வி உதவித்தொகையை மத்திய அரசு நிறுத்தியதை எதிர்த்துக் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். எனினும் சிறுபான்மையினர் மீதான மத்திய அரசின் பாராமுகத்தை அடுத்து, அவர்கள் நிறுத்திய கல்வி உதவித்தொகையை நாமே வழங்க முடிவெடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Tags :