8 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பங்கள்..  இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மீண்டும் அதிகரிக்கும் மவுசு...

by Admin / 04-08-2021 12:33:04pm
8 நாட்களில் 1 லட்சத்துக்கும் மேல் விண்ணப்பங்கள்..  இன்ஜினியரிங் படிப்புகளுக்கு மீண்டும் அதிகரிக்கும் மவுசு...


கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொறியியல் படிப்புக்களுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கி  8 நாட்களில்  ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

 தமிழ்நாட்டில் உள்ள 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech.
 
, படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கியது.

விண்ணப்ப பதிவு தொடங்கியதில் இருந்தே அதிகளவிலான மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வமுடன் விண்ணப்பித்து வரும் நிலையில், 8-வது நாளான நேற்று ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 611  பேர் விண்ணப்பித்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க மேலும் 20 நாட்கள் அவகாசம் உள்ளதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு கூறியுள்ளது.

 

Tags :

Share via