அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED உத்தரவு

by Staff / 22-02-2024 03:03:51pm
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ED உத்தரவு

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக 7வது முறையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில், பிப்.26ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 6 முறை சம்மன் அனுப்பிய நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இதுவரை ஆஜராகவில்லை. இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7வது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதே போன்ற மற்றொரு முறைகேடு வழக்கு ஒன்றில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via