கண்டைனர் லாரி மீது மோதிய கார்.. தாத்தா பேரன் பலி

by Staff / 28-02-2024 03:42:38pm
கண்டைனர் லாரி மீது மோதிய கார்.. தாத்தா பேரன் பலி

ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்துள்ள லட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது வேலூரில் இருந்து ஊட்டி நோக்கி குடும்பத்தினருடன் சென்ற கார் கண்டைனர் லாரி மீது மோதியுள்ளது. இதில் காரின் பயணம் செய்த தாத்தா கமாதீன் (65) மற்றும் அவரது பேரன் அபுதாகிர் (9) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் பயணித்த சுபைதா, நவாஸ் மற்றும் ஆசிபா ஆகிய மூவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via