பெண்ணாக பிறப்பதே இங்கு குற்றமாகிவிட்டது - ப்ரியங்கா

by Staff / 08-03-2024 12:26:35pm
பெண்ணாக பிறப்பதே இங்கு குற்றமாகிவிட்டது - ப்ரியங்கா

உ.பி யில் சிறுமிகள் பலாத்காராம் செய்யப்பட்டது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தி, செங்கல் சூளையில் வேலை செய்துகொண்டிருந்த 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிரட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சிறுமிகளின் தந்தையும் தற்போது தற்கொலை செய்து கொண்டது வேதனையின் உச்சம். பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் நீதி கேட்டால் அவர்களின் குடும்பங்களை முற்றிலுமாக அழித்தொழிப்பதுதான் உ.பி மாநிலத்தில் சட்டமாகி விட்டது. இங்கு, பெண்ணாக பிறப்பதே குற்றம் என்றாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via