இலங்கை கடற்படையால் மேலும் 22 மீனவர்கள் கைது

by Staff / 10-03-2024 02:45:36pm
இலங்கை கடற்படையால் மேலும் 22 மீனவர்கள் கைது

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 22 பேர் கடந்த 6-ம் தேதி அதிகாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 22 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர். இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் பிரச்சனையில் பாஜக அரசு பாராமுகம் காட்டுவதாக மீனவர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via