போலி நகை அடகு வைத்து மோசடி கேரளா ஆட்டோ டிரைவர் கைது

by Staff / 22-03-2024 12:43:42pm
போலி நகை அடகு வைத்து மோசடி கேரளா ஆட்டோ டிரைவர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிதி நிறுவனங்களில்  போலி நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்று வந்தது.குறிப்பாக கடந்த மாதம்  கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நான்கு பைனான்ஸ்களில் போலி நகை அடகு வைத்து பணம் பெற்ற சம்பவம் குறித்து, கடந்த பிப்ரவரி மாதம் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இது தொடர்பாக களியக்காவிளை பகுதியை  சேர்ந்த லால் கிங்சிலி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலி நகைய அடகு வைத்து பணம் பெற்று மோசடி ஈடுபட்டது தெரிய வந்தது.

மேலும்  இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் கேரளா மாநிலம் பீமாபள்ளி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட தனிப்படை போலீசார் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட திருவனந்தபுரம் பீமாபள்ளி அருகே பூந்துறை ஆசாத் நகர் பகுதியை சேர்ந்த அல் அமீன் (36) ஆட்டோ டிரைவரை பிடித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து கொல்லங்கோடு போலீசார் அல் அமீனை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

 

Tags :

Share via