2026-க்கு பிறகு திமுகவே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எங்கள் கூட்டணி உருவாக்கும்-பிரேமலதா விஜயகாந்த்.

by Editor / 24-03-2024 11:41:52pm
2026-க்கு பிறகு திமுகவே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எங்கள் கூட்டணி உருவாக்கும்-பிரேமலதா விஜயகாந்த்.

திருச்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். அந்த வகையில் இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக - தேமுதிக கூட்டணி என்பது வெற்றி கூட்டணி. வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். உறுதியாக இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசும்போது:எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் திமுக அரசு தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்தியிலுள்ளவர்களை வந்து தமிழகத்தில் ஆட்சியேற்க சொல்லுங்கள்,
பெட்ரோல், டீசல் விலை & கேஸ் விலை குறைப்பு என சாத்தியமில்லாத வாக்குறுதிகளை சொல்கின்றது திமுக.

சிஏஏ திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த எங்கள் கூட்டணி என்றும் விடாது.2026-க்கு பிறகு திமுகவே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எங்கள் கூட்டணி உருவாக்கும்.என்றார்.

 

Tags : 2026-க்கு பிறகு திமுகவே தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எங்கள் கூட்டணி உருவாக்கும்-பிரேமலதா விஜயகாந்த்.

Share via