2 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை

by Staff / 25-03-2024 12:40:43pm
2 வயது பெண் குழந்தையை கொன்ற கொடூர தந்தை


 கேரளாவின் மலப்புரம் அருகே காளிகாவு பகுதியில் இந்த நடுங்க வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் தந்தை முகமது ஃபாயிஸ் மீது குழந்தையின் தாய் மற்றும் அவரது உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். குழந்தையை அடித்து சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக குற்றம் சாட்டினர். புகாரின் பேரில் கருவரகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் முகமது ஃபாயிஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தொண்டையில் உணவு சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவர் மருத்துவரிடம் கூறியுள்ளார்.
இறுதியில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது. இதையடுத்து, குழந்தையின் தாயும், அவரது உறவினரும் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். குடும்பப் பிரச்சனையால் தனது குழந்தையை கணவர் கொன்றுவிட்டதாக தாய் தெரிவித்தார்.

 

Tags :

Share via