அண்ணாமலை, செந்தில் நாதன் உட்பட 700 பேர் மீது வழக்கு

by Staff / 31-03-2024 12:10:53pm
அண்ணாமலை, செந்தில் நாதன் உட்பட 700 பேர் மீது வழக்கு

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக வேட்பாளர் செந்தில் நாதன் உட்பட 700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தல் பரப்புரையின்போது அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து, அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி (இரவு 10 மணிக்கு மேல்) பிரச்சாரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ, அதிமுக வேட்பாளர் கருப்பையா, நாதக வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

 

Tags :

Share via