விழுப்புரம் தொகுதியில் 17 பேர் போட்டி

by Staff / 31-03-2024 02:07:36pm
விழுப்புரம் தொகுதியில் 17 பேர் போட்டி

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. விழுப்புரம் (தனி) தொகுதியில் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சை என 31 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று மனுக்கள் திரும்பபெற பிற்பகல் 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 10-க்கும் மேற்பட்டோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதன்படி, ஏற்கனவே மனுதாக்கல் செய்திருந்த மக்கள் புரட்சி கழக வேட்பாளர் ராஜ்குமார் மட்டும், தனது மனுவை திரும்பப்பெற்றார். இதனால், 17 பேர் போட்டியிடுவது உறுதியானது.அதனைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது, விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்கு, பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories