கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவன் பலி

by Staff / 03-04-2024 05:34:13pm
கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவன்  பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி ஜே ஜே நகர் பகுதியில் சேர்ந்தவர் மனோஜ் வயது 20 இவர் சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் படித்து வந்தார் இவர் நேற்று தனது நண்பருடன் கோபிக்கு சென்று விட்டு மீண்டும் புஞ்சைபுளியம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் இருவரும் வந்தனர் அப்போது புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த செண்பக புதூர் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இரண்டு பேரும் குளித்தனர் இதில் ஆழமான பகுதிக்கு மனோஜ் சென்றுள்ளார் நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினர் உடனே அவருடைய நண்பர் மனோஜ் காப்பாற்ற முயன்றார் மேலும் அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர் ஆனால் முடியவில்லை இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மனோஜ் பிணமாக மீட்டனர் இது குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via