நடிகர் வாகை சந்திரசேகர் வாக்கு சேகரிப்பின் போது மக்களை ஏமாற்றுவதில் மோடி ஒரு மாமனிதர் என கிண்டல் பேச்சு

by Editor / 04-04-2024 11:56:44pm
நடிகர் வாகை சந்திரசேகர் வாக்கு சேகரிப்பின் போது மக்களை ஏமாற்றுவதில் மோடி ஒரு மாமனிதர் என கிண்டல் பேச்சு

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக இந்தியா கூட்டணி சார்பில் ராணி ஸ்ரீகுமார் போட்டியிடுகிறார். இந்த நிலையில் அவரை ஆதரித்து தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை பகுதியில் நடிகர் வாகை சந்திரசேகர் தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. அந்த வகையில் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் இனி வரும் காலங்களில் ஜனநாயக முறையில் நடைபெறக் கூடிய தேர்தல் நடைபெறாது. மாறாக ராணுவ ஆட்சியைப் போல சர்வாதிகார ஆட்சியைப் போல செயல்படுவார்கள் என தெரிவித்தார்.மேலும் அவர் பேசுகையில், மோடி பொய்யான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறார். மக்களை ஏமாற்றும் மாமனிதனாக மோடி உள்ள நிலையில் இந்தியா கூட்டணிக்கு வாக்கு செலுத்துமாறு வாக்கு சேகரிப்பில் கேட்டுக்கொண்டார்.அவருடன் தெற்குமாவட்ட செயலாளர் ஜெயபாலன்,ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

Tags : நடிகர் வாகை சந்திரசேகர் வாக்கு சேகரிப்பின் போது மக்களை ஏமாற்றுவதில் மோடி ஒரு மாமனிதர் என கிண்டல் பேச்சு

Share via