இந்திய கடற்படையின் புதிய தலைவராக தினேஷ் திரிபாதி நியமனம்

by Staff / 19-04-2024 11:36:24am
இந்திய கடற்படையின் புதிய தலைவராக தினேஷ் திரிபாதி நியமனம்

அட்மிரல் ஹரி குமாரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய கடற்படையின் புதிய தலைவராக வைஸ் அட்மிரல் தினேஷ் திரிபாதியை மத்திய அரசு அறிவித்துள்ளது. கடற்படை தளபதியாக திரிபாதி இம்மாதம் 30ஆம் தேதி பதவியேற்கிறார். திரிபாதி முன்பு மேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். பல கடற்படை நடவடிக்கைகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார். ஜூலை 1, 1985 இல் கடற்படையில் சேர்ந்த திரிபாதி, 2019 இல் வைஸ் அட்மிரல்/வைஸ் சீஃப் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

 

Tags :

Share via