மளிகை கடையில் மருந்து விற்பனை.. புதிய திட்டம்

by Staff / 19-04-2024 02:37:44pm
மளிகை கடையில் மருந்து விற்பனை.. புதிய திட்டம்

சளி மற்றும் இருமல் மருந்துகள், வலி ஆயின்மெண்ட்கள் ஆகியவற்றை வாங்குவதென்றால் நாம் மருந்து கடைகளுக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் அணைத்து நேரங்களிலும் இது சரியாக கிடைப்பதில்லை. இந்நிலையில் இந்த சிக்கலை போக்க மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டுவர உள்ளது. அதாவது, விரைவில் பொதுவான மருந்துகளை அதாவது மருத்துவரின் பரிந்துரை சீட்டுகள் இல்லாத மருந்துகளை சாதாரண கடைகளிலேயே விற்பனை செய்ய அரசு அனுமதி அளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓவர் தி கவுண்டர் மருந்துகள் எனப்படும் வலி நிவாரணி ஜெல்கள் மற்றும் சளி மாத்திரைகள் ஆகியவை எளிதாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via