காவல் நிலையத்தில் பெண் காவலர்களுக்கு வளைகாப்பு

by Staff / 21-04-2024 03:37:06pm
காவல் நிலையத்தில் பெண் காவலர்களுக்கு வளைகாப்பு

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் சார்பு ஆய்வாளர் கௌசல்யா மற்றும் பெண் காவலர் பிரியா மேரி ஆகிய இருவரும் கர்ப்பமாக உள்ள நிலையில் சக காவலர்கள் சார்பில் காவல் நிலையத்திலேயே இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துணை காவல் கண்காணிப்பாளர் தனஜெயன் தலைமையில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான காவலர்கள் கலந்துக் கொண்டனர்.

 

Tags :

Share via