விமான பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் இருந்து குஜராத் அகமதாபாத்திற்குச் செல்ல இருந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக பயணிகள் தயாராக இருந்தனர். இதற்கிடையே பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது. அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஜெர்ட் ஏர்சின் என்பவரிடம் துப்பாக்கித் தோட்டா இருந்ததை அதிகாரிகள் கவனித்தனர். உடனே அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, அந்நபரிடம் இருந்த தோட்டாக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :