வெடி விபத்து: குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம்.

by Editor / 02-05-2024 11:41:39pm
வெடி விபத்து: குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ரொக்கமாக ரூ.50 ஆயிரம், காசோலையாக ரூ.11.50 லட்சம் உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டது. வெடி விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (47), கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த துரை (25), குருசாமி (60) ஆகிய மூவரும் உடல் சிதறி உயிரிழந்தனர்.

 

Tags : வெடி விபத்து: குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம்.

Share via