ராஜஸ்தானில் புளூடூத் இயர்போன் வெடித்து உயிரிழந்த சிறுவன்

by Editor / 07-08-2021 07:34:27pm
 ராஜஸ்தானில் புளூடூத் இயர்போன் வெடித்து உயிரிழந்த சிறுவன்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகேயுள்ள உதய்புரியா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ராகேஷ் குமார் நகர். இவர் சம்பத்தன்று தனது புளூடூத் இயர்போனை காதில் மாட்டிக் கொண்டு யாருடனோ போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக இயர்போன் வெடித்துச் சிதறியது. இதில் அந்த சிறுவன் மயக்கமடைந்தான். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அச்சிறுவனை மீட்டு உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் தெரிவித்துள்ளனர். இயர்போன் சாதனம் வெடித்துச் சிதறியதில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயர்போன் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு அச்சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே இயர்போன் வெடித்துச் சிதறி ஒருவர் உயிரிழந்திருப்பது இதுவே முதல்முறையாக இருக்கலாம் எனக் குறிப்பிட்ட மருத்துவர்கள், இயர்போன் வெடித்துச் சிதறியதில் அந்த சிறுவனின் இரண்டு காதுகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தகவலளித்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,

 

Tags :

Share via