மின்னல் தாக்கியதில் 20 ஆடுகளுடன் சேர்ந்து பெண்பலி .
பெங்களூருவில் 5 மாதங்கள் கழித்து தற்போது மழை பெய்து வரும் நிலையில், ஹோஸ்கோட் தாலுகா கங்காலு என்ற கிராமத்தில் மின்னல் தாக்கி ரத்மம்மா என்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்திற்கு அருகில் உள்ள வேப்ப மரத்தடியில் ஆடுகளுடன் நின்று கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் 20 ஆடுகளுடன் சேர்ந்து ரத்மம்மா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags : மின்னல் தாக்கியதில் 20 ஆடுகளுடன் சேர்ந்து பெண்பலி .