பயங்கர விபத்து.. ஐந்து பேர் பலி

by Staff / 04-05-2024 12:08:59pm
பயங்கர விபத்து.. ஐந்து பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் சனிக்கிழமை காலை பயங்கர சாலை விபத்து நடந்தது. முசோரி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஜாரிபானி சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் கவிழந்தது. இந்த விபத்தில் 4 சிறுவர்களும் ஒரு சிறுமியும் உயிரிழந்தனர். போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மற்றொரு பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் அனைவரும் டேராடூனில் உள்ள ஐஎம்எஸ் கல்லூரியில் பயின்று வந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

 

Tags :

Share via