திருச்செந்தூர் கடலில் குளிக்கத்தடை

by Staff / 05-05-2024 03:16:52pm
திருச்செந்தூர் கடலில் குளிக்கத்தடை

கள்ளக்கடல் நிகழ்வு நடப்பதால் கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். கோடை விடுமுறை, ஞாயிற்று கிழமை என்பதால் திருச்செந்தூர் கோயிலில்
பக்தர்கள் அதிகளவில் குவிந்துள்ள நிலையில், கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

 

Tags :

Share via