சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி

by Staff / 07-05-2024 01:12:33pm
சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சி

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்றிக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்றதை தடுத்த ஊழியர் மீது ஓட்டுநர் காரை ஏற்ற முயன்றுள்ளார். இது பற்றி சுங்கச்சாவடி ஊழியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் இதுபோன்ற பிரச்சனை வாடிக்கையாக உள்ளது. சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கும்.

 

Tags :

Share via