காவல்துறை கண்டித்து நடைபெற இருந்த போராட்டம் மோதலாக வெடித்தது.

by Staff / 08-05-2024 05:11:37pm
காவல்துறை கண்டித்து நடைபெற இருந்த போராட்டம் மோதலாக வெடித்தது.

நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல்நிலையத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய்வழக்குகள் பதிவு செய்யும் காவல்துறை உதவி ஆய்வாளர்கள் அருள்ராஜ் மற்றும் பவுல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல்திமுக  முக்கிய பிரமுகர் தடுப்பதாக புகார் கூறி, 9 பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிடப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், காவல்துறையினர் குவிக்கப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டதால், வன்னிக்கோனேந்தலில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய ஏராளமானவர்களை போலீசார்  கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via