மதுரை ஆதீனம் அருணகிரி சுவாமி  மருத்துவமனையில் அனுமதி

by Editor / 09-08-2021 07:08:52pm
மதுரை ஆதீனம் அருணகிரி சுவாமி  மருத்துவமனையில் அனுமதி



உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், மதுரையிலுள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமணங்களில் ஒன்று மதுரை ஆதீனம். இங்கு தலைமை வகிக்க நியமிக்கப்படுபவர் ஆதீனம் என்று அழைக்கப்படுகிறார்.


திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது மதுரை ஆதீனம். இதுவரை 292 பேர் இங்கே மடாதிபதியாக. இதில் 292வது ஆதீனம்தான், அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி.இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது உடல்நிலைக் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. இதுபோன்று இதற்கு முன்பும், பலமுறை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அருணகிரி சுவாமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via