தூத்துக்குடியில் இன்று அதிகாலை நண்பர் வீட்டில் வாலிபர் வெட்டிக் கொலை

by Admin / 29-08-2021 10:54:39pm
தூத்துக்குடியில் இன்று அதிகாலை நண்பர் வீட்டில் வாலிபர் வெட்டிக் கொலை



தூத்துக்குடியில் இன்று அதிகாலை நண்பர் வீட்டில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்-1 பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் துறைமுகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராமச்சந்திரன் என்ற ரமேஷ் (வயது 22). சென்ட்ரிங் தொழிலாளி.

இவர்களுக்கு சொந்தமான வீடுதூத்துக்குடி முருகேசன் நகரில் உள்ளது. இந்நிலையில் ரமேஷ் வீட்டில் கோபித்துக் கொண்டு நேற்று இரவு முருகேசன்நகருக்கு சென்றார்.

பின்னர் தனது நண்பர் டேனியல் வீட்டிற்கு சென்ற அவர் இரவில் அங்குள்ள மொட்டை மாடியில் படுத்து உறங்கினார். டேனியல் வழக்கம்போல வீட்டினுள் படுத்திருந்தார்.

இன்று அதிகாலை ரமேசின் அலறல் சத்தம் கேட்டு டேனியல் குடும்பத்தினர் மாடிப்பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்து அரிவாள், கத்தியுடன் 3 பேர் தப்பி சென்றனர்.

அங்கு ரமேஷ் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருததுவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தினர்.

அதில் ரமேசை கொலை செய்தது தூத்துக்குடியை சேர்ந்த ராஜபாண்டி, முத்துப்பாண்டி உள்ளிட்ட 3 பேர் என்பது தெரியவந்தது.

அவர்கள் எதற்காக ரமேசை கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via