தூத்துக்குடி: தீ பரவி, முறிந்து விழுந்த காற்றாலை

by Editor / 09-09-2021 09:06:28am
தூத்துக்குடி:  தீ பரவி, முறிந்து விழுந்த காற்றாலை

தூத்துக்குடி மாவட்டத்தில்பசுவந்தனை பகுதியில் தனியார் கம்பெனிக்குச் சொந்தமான காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், திடீரென ஒரு காற்றாலையில் மூன்று இறக்கைகளும் முன்புறமாக ஒடிந்து கவிழ்ந்து விழுந்தன. பலத்த சத்தத்துடன் தீ பரவி, புகை மூட்டமானது. இதையடுத்து அப்பகுதி மக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளது. அதிக மின்கசிவு ஏற்பட்டதால் காற்றாலையின் இறக்கைப் பகுதி உடைந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.

திடீரென காற்றாலை முறிந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். 

 

Tags :

Share via