கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக, பாஜக தனித்தனியே வேட்புமனு தாக்கல்

by Editor / 26-09-2021 03:29:46pm
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக, பாஜக தனித்தனியே வேட்புமனு தாக்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிட உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 40 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான இடங்களும், 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்களும் உள்ளன. வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிமுக - பாரதிய ஜனதா இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், அக்கட்சியினர் தனித்தனியே வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வேட்பு மனுவை திரும்பப்பெற கெடு முடிந்த நிலையில், இரு தரப்பிலும் யாரும் வேட்பு மனுக்களை திரும்பப் பெறவில்லை. இதனால், கள்ளக்குறிச்சியில் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

 

Tags :

Share via