செங்கோட்டை - கொல்லம் முன்பதிவில்லா விரைவு ரயிலுக்கு ஆரியங்காவில் நிறுத்தம்  தேவை.

by Editor / 16-12-2021 04:08:42pm
செங்கோட்டை - கொல்லம் முன்பதிவில்லா விரைவு ரயிலுக்கு ஆரியங்காவில் நிறுத்தம்  தேவை.


தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து கொல்லத்துக்கு 15ஆம் தேதி பயணிகள் சேவையை தொடங்கிய செங்கோட்டை - கொல்லம் ரயில், அதன் கால அட்டவணையின்படி ஆரியங்காவு ரயில் நிலையத்தில் நிற்காமல் நியூ ஆரியங்காவு ரயில் நிலையத்தில் சென்று நின்றதால் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

 மதுரையிலிருந்து நேற்று 15/12/21 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் செங்கோட்டைக்கு வந்தது.இந்த ரயிலில் செங்கோட்டைக்கு  வந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் அதே ரயிலில் செங்கோட்டை கொல்லம் ரயிலாக ஒரு மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டது.இந்த ரயிலில்  செங்கோட்டையில் டிக்கட் எடுத்து ஆரியங்காவு கோவிலுக்கு செல்ல பயணித்த  ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ரயிலில்  ஆரியங்காவு ரயில்வே ஸ்டேஷனில் நிற்காமல்  நியூ ஆரியங்காவு ரயில்வே ஸ்டேஷனில் நின்றதால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நியூ ஆரியங்காவு ரயில்வே ஸ்டேஷனில் ரயில்பெட்டிகளுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையே உள்ள உயரம் அதிகமாக இருப்பதால் ஏராளமான பெண் பயணிகள் கீழே இறங்குவதற்கு பயணிகள் நிறைய சிரமப்பட்டனர்.மேலும் நியூ ஆரியங்காவு ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஆரியங்காவு ஐயப்பன் கோவில் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.இந்த ரயில் நிலையத்தில் இறங்கிய பயணிகள் 
சாலைக்கு வந்து 20ரூபாய் கட்டணம் செலுத்தி மீண்டும் ஆரியங்காவு கோவிலுக்கு சென்றடையும் நிலை உள்ளதால் தென்னக ரயில்வே பயன் பாடற்ற நியூ ஆரியங்காவு ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தாமல் வழக்கம் போலுள்ள ரயில் நிலையமான அரியங்காவில் நிறைத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கோட்டை - கொல்லம் முன்பதிவில்லா விரைவு ரயிலுக்கு ஆரியங்காவில் நிறுத்தம்  தேவை.
 

Tags :

Share via