இன்று முதல் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இதே நேரத்தில் தினமும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்,இந்த நேரத்தில் (இரவு 10 முதல் காலை 5 மணி) அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை.சென்னை மாநகரத்தை பொறுத்தவரை 10ஆயிரம் காவலர்கள் நேர ரோந்துப்பணியில் ஈடுப்பட உள்ளனர்.
நெல்லை மாநகர பகுதியில் இரண்டு ஷிப்டுகளாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.ஒரு ஷிப்டுக்கு 400 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் 800 பேர் ஈடுபடுகின்றனர்.
நெல்லை மாநகர எல்கைபகுதிகளில் 7 சோதனை சாவடிகளும் மாநகர உட்பகுதிகளில் 18 சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.நெல்லையின் முக்கிய சந்திப்புகளில் 12 இடங்களில் நடமாடும் காவல்துறை கண்காணிப்பு குழு மூலம் கண்காணிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
Tags :