தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு.

by Editor / 08-01-2022 01:33:09pm
தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்களில்  நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு.

தமிழகத்தில் மீண்டும் அதிக அளவில் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களில் திங்கள்கிழமைத்தோறும்  நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. என பல மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.நெல்லை,தூதுத்துக்குடி,மதுரை,உள்ளிட்ட பல மாவட்டங்களில்  அதற்கான அறிவிப்புகளை மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டு வருகிறது.பொதுமக்கள் தங்கள் குறைகளை மின்னஞ்சல்,  வாட்ஸ்அப்,  அல்லது ஆட்சியர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுவாக அளிக்கலாம். 
தங்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்  திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் பிற குறைதீர்க்கும்  கூட்டங்கள் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள்  அறிவிப்புக்களை வெளியிட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via