ஆந்திராவுக்கு 23 டன் ரேஷன் அரிசியை கடத்திய 3 பேர் குண்டாஸில் கைது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாங்குளம் கிராமத்திலிருந்து ஆந்திராவிற்கு 23 டன் ரேஷன் அரிசியை கடந்த மாதம் 23 ஆம் தேதி கடத்திய வழக்கில் 6 பேரை சிறுபாக்கம் போலீசார் கைது செய்தனர். அதில் மங்களூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித் (25) அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (30) மற்றும் லாரியின் உரிமையாளர் ராமச்சந்திரன் (51)ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
Tags :