காரில் கட்டுக் கட்டாக பணம்; பறக்கும் படை பறிமுதல்

by Staff / 05-05-2024 12:45:57pm
காரில் கட்டுக் கட்டாக பணம்; பறக்கும் படை பறிமுதல்

டெல்லி துக்ளாபாத் பகுதியைச் சேர்ந்த பறக்கும் படையினர், நேற்று இரவு ஓக்லா தொழிற்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சொகுசு காரான BMW ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், சோதனை செய்தனர். அப்போது, 2 பெட்டிகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து காரில் இருந்த இருவரிடம் விசாரித்ததில் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via