மகளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய கணவன், மனைவி பலி .

by Editor / 02-02-2022 02:45:46pm
மகளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பிய கணவன், மனைவி பலி .

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தைச் சேர்ந்தவர் வீரகாளை அவரது மனைவி கவிதா இருவரும் கோவை வேளாண்மை கல்லூரியில் படிக்கும் தங்களது மகளை, மதுரையில் பேருந்தில் அனுப்பிவிட்டு காரில் ஊருக்கு திரும்பியுள்ளனர்.  சித்தாலங்குடி என்ற பகுதியில் கார வந்தபோது எதிரே வந்த அரசு பேருந்தும், காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே வீரகாளையும் அவரது மனைவி கவிதா ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

மேலும் பேருந்தில் இருந்த 15 பேர் காயமடைந்தனர். காரில் சிக்கிக் கொண்ட வீரகாளை, கவிதா உடல்களை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டனர். காயமடைந்தவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து பூவந்தி போலீஸார் விசாரித்து வருகின்றனர். மகளை கல்லூரிக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பியபோது, விபத்தில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : Husband and wife killed after sending daughter to college and returning home.

Share via