கிரானைட் மற்றும் மார்பில் நிறுவனங்களுக்கு 33.59 லட்சம் ரூபாய் அபராதம்
மதுரை மாவட்டத்தில் கிரானைட் மற்றும் மார்பில் தொழில் செய்யும் நான்கு வணிக நிறுவனங்கள் முப்பத்தி ஏழு கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது குறித்து மதுரை மண்டல அமலாக்கப் பிரிவு இணை ஆணையர் இந்திராவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வணிக வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வில் கிரானைட் மற்றும் மார்பிள் தொழில்செய்யும் நான்கு நிறுவனங்கள் முப்பத்தி ஏழு கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு 33.59 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது என்று வணிகவரி துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags : Granite and marble companies fined Rs 33.59 lakh