படைகளை குவித்து இருப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு உக்ரைன் அழைப்பு

by Admin / 14-02-2022 04:33:29pm
 படைகளை குவித்து இருப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு உக்ரைன் அழைப்பு

உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து இருப்பது தொடர்பாக அடுத்த 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோவ் குலேபா ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வியானா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உக்ரேன் விடுத்த கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்கத் தவறி விட்டதாகவும் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர் இதன் விளைவாக அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

என் நிலையை தங்கள் நாட்டு எல்லையிலும் கிரிமியா பகுதியிலும் ரஷ்யப் படைகளை வலுப்படுத்தி வருவது குறித்து அவற்றைத் திரும்பப் பெறுவதும் தொடர்பாக விவாதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via