கள்ளக்காதல் இடையூறாக இருந்த பேத்தியை கொன்ற கள்ளக்காதலன்

by Admin / 10-03-2022 04:19:09pm
 கள்ளக்காதல் இடையூறாக இருந்த பேத்தியை கொன்ற கள்ளக்காதலன்

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சஜிஷ். இவரது மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சஜிசுக்கு2  வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தையை சஜிசின் தாயார் தீப்தி பராமரித்து வந்தார். 

தீப்திக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜாண் பினோய் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருப்பார்கள். சில சமயம் லாட்ஜில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

2 நாட்களுக்கு முன்பு தீப்தியும், அவரது கள்ளக்காதலன் ஜாண் பினோயும் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். லாட்ஜுக்கு தீப்தி தனது பேத்தியையும் அழைத்து சென்றிருந்தார். 

அதிகாலை 2 மணியளவில் அந்த குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லை என்று கூறி தீப்தியும், ஜாண் பினோவும் லாட்ஜில் இருந்து வெளியேறினர்.

அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
 
மேலும் ஆஸ்பத்திரி டாக்டர் இதுபற்றி போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர். அப்போது குழந்தை கொலை குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

லாட்ஜில் தங்கியிருந்தபோது தீப்தியும், ஜாண் பினோயும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்கு குழந்தை இடையூறாக இருந்தது. 

இதில் ஆத்திரமடைந்த ஜாண் பினோய், குழந்தையை குளியலறையில் இருந்த வாளி தண்ணீரில் மூழ்கடித்து கொன்றது தெரிய வந்தது. 

இதையடுத்து போலீசார் ஜாண் பினோயை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

 

Tags :

Share via