புயல் எதிரொலி நடுக்கடலில் மாட்டிக்கொண்ட மீனவர்கள்-பயத்தில் உறவினர்கள்!

by Editor / 16-05-2021 09:02:07am
புயல் எதிரொலி நடுக்கடலில்  மாட்டிக்கொண்ட மீனவர்கள்-பயத்தில் உறவினர்கள்!

நடுக்கடலில் படகு கவிந்து, நாகையைச் சேர்ந்த 10 மீனவர்கள் உயிரிக்குப் போராடி வருகின்றனர். இவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

அரபிக் கடலை நோக்கி நாகை மீனவர்கள் அதிகாலை மூன்று மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேக புயலில் படகு சிக்கியது. இதனால் படகில் பயணித்த 10 பேரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இதனை அறிந்த மீனவர்களின் உறவினர்கள் புயலில் சிக்கி மாயமான 10 மீனவர்களை மீட்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மத்திய மற்றும் மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் கொண்டு தேடுதல் பணியை முடுக்கி விட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via