இலங்கை அகதிகளுக்கும் கொரோனா நிவாரான நிதி வழங்க தமிழக அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 107 முகாம்களில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து முகாம்களிலும், மக்கள் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். இதனால், அகதிகள் முகாம்களில் அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, அகதிகள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் தங்குவதற்கு பொது கட்டடங்களையும், காலியாக உள்ள வீடுகளையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு அறிவுருத்தல் வழங்கியுள்ளது.
Tags :