பஸ் நடுரோட்டில் தீ பிடித்து எரிந்தது

by Staff / 02-04-2022 05:27:56pm
 பஸ் நடுரோட்டில் தீ பிடித்து எரிந்தது

கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள் கோவா மாநிலத்திற்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர்.மாணவர்கள் சென்ற பஸ் கோவா மாநிலம் பனாஜியை அடுத்த பழைய கோவா பகுதியில் சென்று கொண்டிருந்தது.அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. 

உடனே டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். அதற்குள் பஸ் தீப்பிடித்து எரிந்தது.அப்போது காற்று பலமாக வீசியதால் பஸ் முழுவதும் தீ மளமளவென பரவியது. உடனே பஸ்சில் இருந்த மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதற்கிடையே பஸ் தீப்பிடித்து எரிந்த தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

 

Tags :

Share via