உக்ரேனில் மக்களை வெளியேற்ற கப்பல்களை அனுப்ப தயார்

by Staff / 03-04-2022 12:44:11pm
உக்ரேனில் மக்களை வெளியேற்ற கப்பல்களை அனுப்ப தயார்

உக்ரைனின் துறைமுக நகரானமரியுபோல் நகரம் போரால் உருக்குலைந்த நிலையில் அங்கிருந்து குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றி துருக்கி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

பொதுமக்கள் ஏராளமானோர் காயம் அடைந்து இருப்பதால் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவும் துருக்கி கடற்படையினர் தயாராக உள்ளதாக துருக்கி  பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கடல் வழிப் பாதையில் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கண்ணிவெடிகளை கண்டுபிடித்தும் அகற்றும் பணியில் துருக்கி கடற்படை ஈடுபட்டு உள்ளனர்.

ருமேனியா கடற்படையினரும் கடல் பாதையில் ஆபத்தான கண்ணிவெடிகளை கண்டு அகற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.

உக்ரேன் தனது கண்ணிவெடிகளை கடலில் கொட்டி வைத்து உள்ளதாக கடந்த வாரம்  ரஷ்ய குற்றம் சாட்டியிருந்தது.

 

Tags :

Share via