வேதியல் தொழிற்சாலை அணு உலை வெடித்து பயங்கர தீ விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் வேதியல் தொழிற்சாலையில் அணுஉலை வெடிப்பு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் ஏலூர் மாவட்டத்திலுள்ள ஆக்கிரேட்டிகுடிம் என்ற பகுதியில் அமைந்துள்ள வேதிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலையின் நான்காவது யூனிட்டில் திடீரென வாயு கசிவு ஏற்பட்ட அணு உலை வெடித்து வெடித்து தீப்பற்றியது இதனால் நான்காவது யூனிட் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் அங்கு சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் 14 பேர் காயமடைந்தனர் இவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா25 லட்சம் ரூபாய் இழப்பீடு படுகாயமடைந்தவர்கள் 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநிலா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
Tags :