தனியார் நிறுவன மேலாளர் கத்தியால் தாக்கிவிட்டு 82 லட்சம் ரூபாய் கொள்ளை 4 பேர் கைது

by Staff / 15-04-2022 01:24:58pm
தனியார் நிறுவன மேலாளர் கத்தியால் தாக்கிவிட்டு 82 லட்சம் ரூபாய் கொள்ளை 4 பேர் கைது

சென்னை அம்பத்தூர் அருகே தனியார் நிறுவன மேலாளரை கத்தியால் தாக்கிவிட்டு 82 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் இருந்து 72 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து உள்ளனர்.வானகரத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் மேலாளர் விஜயகுமார் என்பவர் கடந்த 10ஆம் தேதி 82 லட்சம் ரூபாய் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மூன்று பேர் வழிமறித்து அவரை கத்தியால் தாக்கிவிட்டு பணத்தை பறித்து சென்றனர். ஏற்கனவே ஒருமுறை விஜயகுமாரிடம் 25 லட்ச ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் சிக்கி ஜாமீனில் வெளிவந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான சுப்பிரமணியம் என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் கைது செய்தனர். சிறையில் இருக்கும்போது பழக்கமான ஸ்ரீகாந்த் என்பவளிடம் இந்த 82 லட்சம் ரூபாய் கொலைக்கான திட்டம் தீட்டி கொடுத்ததும் அவர்தான் என்பது தெரியவந்தது ஆனால் கொள்ளை அடித்த பணத்தை பறிக்கும் கும்பல் தலைமறைவாகி விட்ட நிலை சிசிடி காட்சிகளின் அடிப்படையில் சிறந்த மற்றும் அவனது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via