திருநங்கைகளுக்கான அழகி போட்டி சென்னையை சேர்ந்த சாதனா என்பவர் முதலிடம்
விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை சாதனம் முதலிடம் பெற்றார். கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் விழாவின் தொடக்கமாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் திருநங்கைகளுக்கான நடனப் போட்டிகள் நடைபெற்றன. அதன்பிறகு திருநங்கைகளின் பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சிகளும் கல்வி வேலைவாய்ப்புகளில் உள்ள திருநங்கைகளின் அணிவகுப்பும் நடந்தது. அதனை தொடர்ந்து மிஸ் திருநங்கை அழகி போட்டிக்கான தேர்வு நடந்தது மூன்றாவது சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் சென்னையை சேர்ந்த சாதனம் முதலிடத்தை சென்னையை சேர்ந்த மதுமிதா இரண்டாம் இடத்தையும் சென்னையை எல்சா சேர்ந்த மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி நடிகர் சூரி நடிகை நளினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags :