தென்னாப்பிரிக்காவில் வெள்ளம் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 443 ஆக உயர்வு

by Staff / 18-04-2022 12:27:17pm
தென்னாப்பிரிக்காவில் வெள்ளம் நிலச்சரிவு பலி எண்ணிக்கை 443 ஆக உயர்வு

தென் ஆப்ரிக்காவின்  டார்வின் மகாணத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரித்துள்ளது .கடற்கரை நகரமான டர்பன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகள் மேம்பாலங்கள் துறைமுகம் உள்ளிட்ட கட்டமைப்புகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் களமிறக்கப்பட்ட உள்ளனர்.

 

Tags :

Share via